sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுவாமியே சரணம் ஐயப்பா (2) அச்சம் தீர்க்கும் வாள்

/

சுவாமியே சரணம் ஐயப்பா (2) அச்சம் தீர்க்கும் வாள்

சுவாமியே சரணம் ஐயப்பா (2) அச்சம் தீர்க்கும் வாள்

சுவாமியே சரணம் ஐயப்பா (2) அச்சம் தீர்க்கும் வாள்


ADDED : நவ 18, 2025 05:13 AM

Google News

ADDED : நவ 18, 2025 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அச்சன் கோவில். இங்கு பூர்ணா, புஷ்கலாவுடன் காட்சி தருகிறார் ஐயப்பன். இவரது கையில் அதிசய வாள் உள்ளது. அதில் என்ன அதிசயம்?

முன்பொரு காலத்தில் பெரியவர் ஒருவர் அச்சன்கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தார். இரவாகி விடவே அவருக்கு வழி தெரியவில்லை. 'சுவாமியே... ஐயப்பா... எனக்கு வழிகாட்டப்பா' என வேண்டினார்.

அப்போது அசரீரியாக, 'கவலைப்படாதீர். தற்போது வாள் ஒன்று தோன்றும். அது காட்டும் வழியில் செல்லுங்கள். கோயிலை அடைந்ததும் அதை சன்னதியில் சேர்த்து விடுங்கள்' என்றது. அதன்படி வாள் தோன்றியது. அது காட்டும் வழியிலேயே சென்று கோயிலை அடைந்தார். இந்த வாளின் அதிசயமே அதன் எடைதான். ஆம். இதை குழந்தை முதல் பலசாலி வரை துாக்கலாம். யார் துாக்கினாலும் அவர்களின் இயல்புக்கு ஏற்ப அதன் எடை மாறும்.

உற்ஸவ நாளில் தர்ம சாஸ்தாவுடன் இந்த வாளும் கொண்டு வரப்படும். அப்போது பக்தர்கள், 'சுவாமியே சரணம் ஐயப்பா' என சரண கோஷம் எழுப்புவர். இதை தரிசிப்பவர்கள் 'அச்சம் என்றால் என்ன' எனக் கேட்பார்கள்.






      Dinamalar
      Follow us