sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இல்லை: ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

/

கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இல்லை: ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இல்லை: ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இல்லை: ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

14


ADDED : ஜன 31, 2025 06:42 PM

Google News

ADDED : ஜன 31, 2025 06:42 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மியிலிருந்து 7 எம்.எல்.ஏ.க்கள் விலகினர்.

டில்லியில் வரும் பிப்.5 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. பிப்.8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் இன்று டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 7 எம்.எல்.ஏ.,க்கள் விலகியது. டில்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டில்லி சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான நேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது. இது குறித்து ஆம் ஆத்மி பாலம் எம்.எல்.ஏ., பாவனா கவுர், கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உங்கள் மீதும், கட்சியின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதால், ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்கிறேன். தயவுசெய்து அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நான், திரிலோக்புரி எம்.எல்.ஏ., ரோஹித் மெஹ்ரௌலியா, ஜனக்புரி எம்.எல்.ஏ., ராஜேஷ் ரிஷி, கஸ்தூர்பா நகர் எம்.எல்.ஏ., மதன் லால், மெஹ்ரௌலி எம்.எல்.ஏ., நரேஷ் யாதவ்,ஆதர்ஷ் நகரைச் சேர்ந்த பவன் சர்மா மற்றும் பிஜ்வாசனைச் சேர்ந்த பி.எஸ். ஜூன் ஆகிய ஏழு எம்.எல்.ஏ.,க்கள் இன்று கட்சியிலிருந்து முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறோம்.இவ்வாறு பாவனா கவுர் கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 2025 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி டிக்கெட் வழங்காதவர்கள். இந்த அனைத்து தொகுதிகளிலிருந்தும் கட்சி புதிய முகங்களை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த 7 பேரும் கட்சியிலிருந்து விலகி உள்ளனர்.






      Dinamalar
      Follow us