ADDED : மார் 19, 2024 10:29 PM

புதுடில்லி:புதுடில்லி துவாரகா 7வது செக்டாரில் அமைந்துள்ள ஸ்ரீராம் மந்திரில் இன்று, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தப்படுகிறது.
இதுகுறித்து, கோவில் நிர்வாகக் குழு தலைவர் ராஜூ, அறங்காவலர் விஸ்வநாதன் ஆகியோர் கூறியதாவது:
புதுடில்லி துவாரகா 7வது செக்டாரில் அமைந்துள்ள ஸ்ரீராம் மந்திரில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் மூலாம்னாயம் ஸர்வஞ்ய பீடம் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசியுடன் இன்று நடக்கிறது.
இன்று காலை 8:30 மணிக்கு நான்காம் கால பூஜைகள், ஜபம், ஹோமம் மற்றும் தத்துவார்ச்சனை நடக்கிறது.
அதைத் தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ருஹப்ரீத்தி நடக்கிறது. காலை 11:00 மணிக்கு கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதையடுத்து, 11:30 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக செய்யப்படுகிறது.
காலை 11:45 மணிக்கு மஹா ஆரத்தி மற்றும் பிரசாத வினியோகம் நடக்கிறது.
இந்த அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தில் அனைவரும் பங்கேற்றும் ஸ்ரீராமரின் அருளைப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

