sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மகா கும்பமேளா: புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது

/

மகா கும்பமேளா: புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது

மகா கும்பமேளா: புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது

மகா கும்பமேளா: புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது

8


ADDED : ஜன 23, 2025 07:07 PM

Google News

ADDED : ஜன 23, 2025 07:07 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரயாக்ராஜ்: மகா கும்ப மேளாவில் இதுவரை புனித நீராடிய யாத்ரீகர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளதாக, உ.பி., அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறும் இந்த விழா முன்னிட்டு, உலகம் முழுவதும் இருந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக, பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

இது குறித்து இன்று 23ம் தேதி உ.பி., அரசு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இன்று மதியம் 12 மணி நிலவரப்படி இதுவரை புனித நீராட வந்த பக்தர்களின் எண்ணிக்கை, 10 கோடியை தாண்டியது. இன்று மட்டும், மதியம் 12 மணிக்குள் 30 லட்சம் பேர் சங்கமத்தில் நீராடினர்.

அதிகபட்சமாக மகர சங்கராந்தி பண்டிகையின் போது (சுமார் 3.5 கோடி) பக்தர்கள் புனித நீராடினர். 1.7 கோடிக்கும் அதிகமானோர் பவுஷ் பூர்ணிமா விழாவில் பங்கேற்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றாலும், பிரயாக்ராஜ் நகரத்தில் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் இல்லை. பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வணிகங்கள் தொடர்ந்து வழக்கம் போல் உள்ளன. மாவட்ட நிர்வாகம் முக்கிய நீராட்டு விழா நாட்களில் மட்டுமே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.






      Dinamalar
      Follow us