மஹா.,மேல்சபை தேர்தல்: காலை வாரிய காங்., எம்.எல்.ஏ.க்கள்
மஹா.,மேல்சபை தேர்தல்: காலை வாரிய காங்., எம்.எல்.ஏ.க்கள்
ADDED : ஜூலை 12, 2024 09:02 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் நடந்த சட்டசபை மேல்சபை தேர்தலில் பா.ஜ., சிவசேனா, அஜித்பவார் கட்சி கூட்டணி பெரும்பான்மை பெற்றது.
இம்மாநில மேல்சபையில் 11 இடங்களின் பதவிகாலம் வரும் 27-ல் நிறைவு பெறுகிறது. இதையடுத்து காலியாக இருந்த 11 இடங்களுக்கு இன்று (12.07.2024) தேர்தல் நடந்தது. மொத்தம் 274 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டளித்தனர்.
இதில் 9 இடங்களில் பா.ஜ., 5 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, 2 இடங்களிலும், அஜித்பவாரின் தேசியவாத காங், 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. எதிர்கட்சி கூட்டணியான எம்.வி.ஏ. 2 இடங்களில் வெற்றி பெற்றது.
இம்மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் பா.ஜ., சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே ) கூட்டணி கை ஓங்கியுள்ளதால், இக்கூட்டணி உற்சாகமடைந்துள்ளது.
எனினும் பா.ஜ., சிவசேனா கூட்டணி 9 இடங்களில் பெற்ற வெற்றிக்கு காங்.,, கட்சி எம்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டளித்ததே காரணம் என கூறப்படுகிறது.