sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்த டாக்டரிடம் ரூ.1.2 கோடி மோசடி

/

வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்த டாக்டரிடம் ரூ.1.2 கோடி மோசடி

வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்த டாக்டரிடம் ரூ.1.2 கோடி மோசடி

வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்த டாக்டரிடம் ரூ.1.2 கோடி மோசடி


ADDED : செப் 11, 2024 03:30 PM

Google News

ADDED : செப் 11, 2024 03:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனே: அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பிய லிங்க் மூலம் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்த டாக்டரிடம் ரூ.1.2 கோடி மோசடி நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் எனக்கூறி பொதுமக்களிடம் மோசடி செய்வது பல்லாண்டு காலமாக நடந்து வருகிறது. அரசும், போலீசாரும் எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் லாபம் சம்பாதிக்கும் ஆசையில் பலர் பணத்தை இழந்து வருகின்றனர். படித்தவர், படிக்காதவர் என வித்தியாசம் இல்லாமல் பலரும் ஏமாந்து வருகின்றனர்.

தற்போது இந்த பட்டியலில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ராணுவ டாக்டர் ஒருவர் இணைந்துள்ளார். அவரிடம் கிரிமினல்கள் ரூ.1.2 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

கடந்த ஜூலை மாத மத்தியில் அடையாளம் தெரியாத சிலர் வாட்ஸ் ஆப் செயலியில், குரூப்பில் இணையும்படி லிங்க் ஒன்றை அனுப்பி உள்ளனர். டாக்டரும் அதில் இணைந்துள்ளார். அதில், பங்குச்சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி உள்ளனர். இதனை உண்மை என நம்பிய அந்த டாக்டரும், அவர்களுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அவர்கள் அனுப்பிய செயலி ஒன்றையும் பதிவிறக்கம் செய்தார். ஆனால், மோசடிக்காக இந்த செயலி அனுப்பப்பட்டுள்ளது என அவர் அறிந்து இருக்கவில்லை.

மோசடிக்காரர்களின் பேச்சை நம்பி 40 நாட்களில் 35 தவணைகளாக ரூ.1.22 கோடி பணத்தை பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பி உள்ளார். ஒவ்வொரு பணம் அனுப்பும் போதும், அவரது கணக்கில் அதிக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அந்த செயலி தெரிவித்துள்ளது. ஒரு நேரத்தில் ரூ.10.26 கோடி பணம் உள்ளதாக காண்பித்து உள்ளது. இதனை பார்த்து அந்த பணத்தை எடுக்க டாக்டர் முயற்சித்துள்ளார். ஆனால், அதற்கு ரூ.45 லட்சம் தர வேண்டும்.இல்லாவிட்டால் அந்த பணத்தை முடக்குவோம் என அந்த மோசடிக்காரர்கள் மிரட்டி உள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர், அவர்களின் முகவரியை கேட்டுள்ளார். அவர்கள் டில்லியில் உள்ள முகவரி ஒன்றை கொடுத்துள்ளனர். அங்கு விசாரித்த போது அது போலி என தெரியவந்தது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை டாக்டர் உணர்ந்துள்ளார். புனே சைபர் கிரைம் போலீசாருக்கு அவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். இதனடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us