sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் அறிவிப்புக்கு முன் மம்தா வெளியிட்ட அறிவிப்பு; பாஜ விமர்சனம்

/

தேர்தல் அறிவிப்புக்கு முன் மம்தா வெளியிட்ட அறிவிப்பு; பாஜ விமர்சனம்

தேர்தல் அறிவிப்புக்கு முன் மம்தா வெளியிட்ட அறிவிப்பு; பாஜ விமர்சனம்

தேர்தல் அறிவிப்புக்கு முன் மம்தா வெளியிட்ட அறிவிப்பு; பாஜ விமர்சனம்

2


ADDED : மார் 15, 2026 06:31 PM

Google News

2

ADDED : மார் 15, 2026 06:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, அரசு ஊழியர்கள், அர்ச்சகர்கள் மற்றும் உலமாக்களுக்கான நிதி பலன்களை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். இதனை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்திற்கு வரும் ஏப்ரல் 23 மற்றும் 29ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், பதிவாகும் ஓட்டுகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மேற்கு வங்க அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவையில் உள்ள அகவிலைப்படியை இந்த மார்ச் முதல் வழங்க இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த முடிவு ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அர்ச்சகர்கள் மற்றும் மவுலவிகளுக்கான மாதாந்திர கவுரவ ஊதியத்தை 500 ரூபாய் உயர்த்தி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், ரூ.1,500 ஆக இருந்த அவர்களின் கவுரவ ஊதியம் ரூ.2,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அர்ச்சகர்கள் மற்றும் மவுலவிகளிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து புதிய விண்ணப்பங்களுக்கும் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும் என்பதால், அதற்கு முன்னதாகவே இந்த அறிவிப்புகளை மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். மேற்கு வங்க அரசின் இந்த அறிவிப்பு தேர்தல் தந்திரம் என்று பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது.

இது குறித்து பாஜ தலைவர் சுவேந்து அதிகாரி கூறியதாவது; நகைச்சுவையான செயல். தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் மம்தா பானர்ஜிக்கு ஊழியர்களும், ஆசிரியர்களும் நினைவுக்கு வருகிறார்களா? பல ஆண்டுகளாக மாநில கஜானாவைச் சுரண்டிவிட்டு, இப்போது கடைசி நிமிடத்தில் மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். ஒரு பைசா கூட உண்மையில் விடுவிக்கப்படாது. இது திரிணாமுல் காங்கிரஸின் வழக்கமான தேர்தல் நாடகம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு தேர்தலில் கைகொடுக்குமா? இல்லையா? என்பது வரும் மே 4ம் தேதி தான் தெரிய வரும்.






      Dinamalar
      Follow us