sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிடி ஆயோக் கூட்டம்: மம்தா வெளிநடப்பு; மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

/

நிடி ஆயோக் கூட்டம்: மம்தா வெளிநடப்பு; மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

நிடி ஆயோக் கூட்டம்: மம்தா வெளிநடப்பு; மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

நிடி ஆயோக் கூட்டம்: மம்தா வெளிநடப்பு; மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

26


UPDATED : ஜூலை 27, 2024 04:03 PM

ADDED : ஜூலை 27, 2024 12:26 PM

Google News

UPDATED : ஜூலை 27, 2024 04:03 PM ADDED : ஜூலை 27, 2024 12:26 PM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்திலிருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். 5 நிமிடங்கள் கூட என்னை பேச அனுமதிக்கவில்லை என்றார். நிடி ஆயோக் கூட்டத்தில் ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா? என முதல்வர்

வெளிநடப்பு


பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் அமைப்பின் 9 வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ., மற்றும் அக்கட்சி கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் 8 பேர் புறக்கணித்தனர். மம்தா பானர்ஜி மட்டும் கலந்து கொண்டார். முன்னதாக அவர், கூட்டத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லை எனில் கூட்டத்தை புறக்கணிப்பேன் எனக்கூறியிருந்தார். அதன்படி, இன்று டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டம் கூடியது. சிறிது நேரத்தில் அவர் வெளிநடப்பு செய்தார்.

மைக் அணைப்பு


நிருபர்களிடம் மம்தா கூறியதாவது: கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தேன். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 20 நிமிடங்கள் பேச அனுமதி வழங்கப்பட்டது. அசாம், கோவா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் 10- 12 நிமிடங்கள் பேசினர். ஆனால், எனக்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இது அநியாயம். எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்றேன். கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டத்தில் பங்கேற்றேன். ஆனால் நான் பேச அனுமதிக்கப்படவில்லை.

நான் பேச துவங்கிய 5 நிமிடங்களில் எனது மைக் அணைக்கப்பட்டது. நான் பேசுவதை நிறுத்தியது ஏன்? ஏன் இந்த பாகுபாடு கட்டப்படுகிறது எனக்கேட்டேன். இந்த கூட்டத்தில் நான் பங்கேற்றதற்கு நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். என்னை பேச அனுமதிக்காதது மேற்கு வங்கத்திற்கு மட்டும் அவமானம் அல்ல. பிராந்திய கட்சிகளுக்கும் அவமானம். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

இது தான் கூட்டாட்சியா?

நிடி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வரை பேச அனுமதிக்காதது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிடி ஆயோக் கூட்டத்தில் ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா?. இதுதான் கூட்டாட்சியா?.

எதிர்க்கட்சிகள் நமது ஜனாநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பா.ஜ., அரசு புரிந்து கொள்ள வேண்டும். கூட்டாட்சியில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு மரியாதை அளிக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகளை எதிரியாக நினைத்து அடக்கி வைக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us