நெற்றியில் ரத்தக்காயங்களுடன் மம்தா : என்ன நடந்தது?
நெற்றியில் ரத்தக்காயங்களுடன் மம்தா : என்ன நடந்தது?
UPDATED : மார் 15, 2024 01:17 AM
ADDED : மார் 14, 2024 08:36 PM

கோல்கட்டா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நெற்றியில் ரத்தக்காயங்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
உடனடியாக அவர் கோல்கட்டாவில் உள்ள எஸ்.எஸ்.கே., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள் என திரிணாமுல் காங்., கட்சியின் ‛எக்ஸ் இணையதளத்தில் செய்தி,புகைபடங்கள் வைரலாகி வருகிறது.
என்ன நடந்தது
இது குறித்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது, நேற்று இரவு 9.45 மணியளவில் வீட்டிலிருந்து போது மம்தா தவறி கீழ விழுந்ததில் நெற்றில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு நெற்றியில் தையல் போடப்பட்ட பின் வீடு திரும்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

