sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரஷ்யா செல்ல போலி ஆவணம் தயாரித்து கொடுத்தவர் கைது

/

ரஷ்யா செல்ல போலி ஆவணம் தயாரித்து கொடுத்தவர் கைது

ரஷ்யா செல்ல போலி ஆவணம் தயாரித்து கொடுத்தவர் கைது

ரஷ்யா செல்ல போலி ஆவணம் தயாரித்து கொடுத்தவர் கைது


ADDED : ஜன 03, 2025 10:48 PM

Google News

ADDED : ஜன 03, 2025 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ரஷ்ய நாட்டுக்குச் செல்ல 4 நேபாளிகளுக்கு போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

டில்லி மாநகரப் போலீசின், விமான நிலைய துணை கமிஷனர் உஷா ரங்னானி கூறியதாவது.

நேபாள நாட்டைச் சேர்ந்த ராஜ்மணி சவுத்ரி,27, ஜெய்சிங் மஹதோ,43, அனில் மஹதோ,28, பிரதிக்யா மஹார்,28, ஆகிய நான்கு பேரும், டிச. 30ம் தேதி ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகருக்குச் செல்லும் விமானத்தில் பயணிக்க, விமான நிலையத்துக்கு வந்தனர்.

பயண ஆவணங்களை ஆய்வு செய்தபோது, நேபாள தூதரகம் வழங்கியிருந்த என்.ஓ.சி., எனப்படும் தடையில்லா சான்றிதழ் போலி என்பது தெரிந்தது.

விசாரணையில், நான்கு பேரும் தலா 9 லட்சம் ரூபாயை, பயண ஏஜென்ட்டுகளான ரோஹித் சவுத்ரி மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர், ரஷ்யாவில் வேலைக்கான ஆர்டர் விசா மற்றும் என்.ஓ.சி., ஆகியவற்றை வாங்கிக் கொடுத்ததாக கூறினர்.

வழக்குப் பதிவு செய்து, தினேஷ் ஷர்மா கைது செய்யப்பட்டுள்ளார். ரோஹித் சர்மாவை போலீசார் தேடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us