sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடிபோதையில் நண்பரை வெட்டி கொன்றவர் கைது

/

குடிபோதையில் நண்பரை வெட்டி கொன்றவர் கைது

குடிபோதையில் நண்பரை வெட்டி கொன்றவர் கைது

குடிபோதையில் நண்பரை வெட்டி கொன்றவர் கைது


ADDED : ஏப் 20, 2025 03:06 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 03:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: குடிபோதை தகராறில், நண்பரை அரிவாளால் வெட்டி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கடம்பழிப்புரம் அழியன்னுாரை சேர்ந்தவர் ராமதாஸ், 54; கூலி வேலை செய்யும் இவரும், ஒற்றைப்பாலம் அம்பலப்பாறை பகுதி சண்முகன், 53, என்பவரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் இரவு சண்முகன் வீட்டில், இருவரும் மது அருந்தினர். நேற்று காலை ரத்த வெள்ளத்தில் ராமதாஸ் இறந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், ஒற்றைப்பாலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார், ராமதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு போதையில் மயங்கிக் கிடந்த சண்முகனிடம் விசாரித்தனர்.

விசாரணையில், போதையில் இருந்த போது, பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த சண்முகன், சமையலறைக்கு சென்று அரிவாள் எடுத்து வந்து ராமதாசை வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. போலீசார், சண்முகனை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us