sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாக்., ஆதரவு கோஷம் எழுப்பியவர் அடித்துக்கொலை: கர்நாடகாவில் 15 பேர் கைது

/

பாக்., ஆதரவு கோஷம் எழுப்பியவர் அடித்துக்கொலை: கர்நாடகாவில் 15 பேர் கைது

பாக்., ஆதரவு கோஷம் எழுப்பியவர் அடித்துக்கொலை: கர்நாடகாவில் 15 பேர் கைது

பாக்., ஆதரவு கோஷம் எழுப்பியவர் அடித்துக்கொலை: கர்நாடகாவில் 15 பேர் கைது

9


ADDED : ஏப் 29, 2025 07:55 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 07:55 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்களூரு: கர்நாடகாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகாவின் மங்களூரு நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடுப்பு கிராமம் உள்ளது. இங்கு இரு தினங்களுக்கு முன் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருவர் கோஷமிட்டார். அதனால் 25க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து, கோஷமிட்டவரை தாக்கினர். பலத்த காயமடைந்த அந்த நபர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர்.

சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

இந்த சம்பவம் கடந்த ஏப்.27 ஆம் தேதி பிற்பகல் பத்ரா கல்லுார்டி கோயில் அருகே நடந்தது. இறந்தவர் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை, அவர் தடிகளால் தாக்கப்பட்டதால், அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன, இதனால் உள் ரத்தப்போக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us