ADDED : ஜூலை 15, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
வடகிழக்கு டில்லி முஸ்தபாபாதில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் பணிபுரிந்தவர் கல்யாண், 35. நேற்று முன் தினம் நள்ளிரவில், கடையின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், கடைக்கு வெளியே சாலையில் மயங்கிக் கிடந்த கல்யாணை மீட்டு, ஜி.டி.பி., மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். விசாரணை நடக்கிறது.