ADDED : ஜூன் 29, 2025 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
டிகோனா பூங்காவில், 8ம் தேதி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ரோஷன், 22, கைது செய்யப்பட்டார். அவரது சகோதரர் நிதிஷ் தலைமறைவாக இருந்தார்.
அவரைத் தேடி வந்த நிலையில், தன் பெற்றோரை சந்திக்க வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. கடந்த, 27ம் தேதி, வீட்டுக்கு வந்த நிதிஷை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.