ADDED : நவ 27, 2024 10:28 PM
புதுடில்லி:சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் வசிக்கும் 27 வயது வாலிபர், 2016ம் ஆண்டு தன் வீட்டுக்கு வந்த சிறுமிக்கு மொபைல் போனில் விளையாட்டுக்களை கற்றுக் கொடுத்தார். மொபைல் போனில் விளையாட அடிக்கடி வந்த சிறுமியை, பல முறை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த விஷயத்தை அறிந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார்படி, போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஹித் குலியா முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், சிறப்பு வக்கீல் சந்தர் ஜீத் யாதவ் ஆஜராகி, 'குற்றவாளி ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்ததற்காக மன்னிப்புக்கு தகுதியானவர் அல்ல; என வாதிட்டார்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.