sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு கடுங்காவல்

/

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு கடுங்காவல்

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு கடுங்காவல்

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு கடுங்காவல்


ADDED : நவ 27, 2024 10:28 PM

Google News

ADDED : நவ 27, 2024 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் வசிக்கும் 27 வயது வாலிபர், 2016ம் ஆண்டு தன் வீட்டுக்கு வந்த சிறுமிக்கு மொபைல் போனில் விளையாட்டுக்களை கற்றுக் கொடுத்தார். மொபைல் போனில் விளையாட அடிக்கடி வந்த சிறுமியை, பல முறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த விஷயத்தை அறிந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார்படி, போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஹித் குலியா முன் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், சிறப்பு வக்கீல் சந்தர் ஜீத் யாதவ் ஆஜராகி, 'குற்றவாளி ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்ததற்காக மன்னிப்புக்கு தகுதியானவர் அல்ல; என வாதிட்டார்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us