sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபரிமலையில் நாளை மண்டல பூஜை தங்க அங்கி இன்று வருகை

/

சபரிமலையில் நாளை மண்டல பூஜை தங்க அங்கி இன்று வருகை

சபரிமலையில் நாளை மண்டல பூஜை தங்க அங்கி இன்று வருகை

சபரிமலையில் நாளை மண்டல பூஜை தங்க அங்கி இன்று வருகை


ADDED : டிச 25, 2024 12:57 AM

Google News

ADDED : டிச 25, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை:சபரிமலையில் நாளை மண்டல பூஜை நடைபெறுகிறது. நவ., 16-ல் துவங்கிய மண்டல கால சீசன், சபரிமலையில் நாளையுடன் நிறைவு பெறுகிறது. நாளை பகல், 12:00 முதல் 12:30க்கு இடைபட்ட முகூர்த்தத்தில் மண்டல பூஜை நடைபெறுகிறது.

இந்த நேரத்தில் அய்யப்பன் விக்ரகத்தில் அணிவிப்பதற்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி பவனி, இன்று மதியம் பம்பை வந்தடைகிறது.

மாலை, 3:00 மணி வரை பம்பை கணபதி கோவில் முன்புறம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். அதன் பின்னர் பெட்டகத்தில் அடைக்கப்பட்டு சன்னிதானம் கொண்டு வரப்பட்டு, அய்யப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது.

நாளை மதியம், 12:00 மணிக்கு களபாபிஷேகத்துக்கு பின், மீண்டும் அய்யப்பன் விக்கரகத்திற்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, மண்டல பூஜை நடைபெறும்.

தங்க அங்கி வருகை, மண்டல பூஜையை ஒட்டி பக்தர்களுக்கு இன்றும், நாளையும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இன்று 50,000, நாளை 60,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்று மதியம் 1:00 மணிக்கு பின் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் வர முடியாது. தங்க அங்கி பம்பையில் இருந்து புறப்பட்டு, சரங்குத்தி கடந்த பின்பே, பம்பையில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.






      Dinamalar
      Follow us