மணீஷ் சிசோடியா ஜாமின் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
மணீஷ் சிசோடியா ஜாமின் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : மே 04, 2024 12:55 AM

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள டில்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமி்ன் மனுவுக்க பதில் அளிக்கும்படி சிபிஐ,அமலாக்கத்துறைக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கினை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் முன்னாள் துணை மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப் 26-ம்தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
2021-22ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது. மணீஷ் சிசோடியா டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமின் கோரி டில்லி ரோஸ் அவென்யூ கோர்டில் மணீஷ் சிசோடியா கடந்த ஏப். 30ல் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நேற்று நீதிபதி ஸ்வர்ன காந்த சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வரும் 8-ம் தேதி ஒத்தி வைத்தார்.