sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்ட் தாக்குதல்; சத்தீஸ்கரில் 9 பேர் வீரமரணம்!

/

பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்ட் தாக்குதல்; சத்தீஸ்கரில் 9 பேர் வீரமரணம்!

பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்ட் தாக்குதல்; சத்தீஸ்கரில் 9 பேர் வீரமரணம்!

பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்ட் தாக்குதல்; சத்தீஸ்கரில் 9 பேர் வீரமரணம்!

5


ADDED : ஜன 06, 2025 04:07 PM

Google News

ADDED : ஜன 06, 2025 04:07 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதில் படைவீரர்கள் உட்பட 9 பேர் வீர மரணம் அடைந்தனர்.

முதற்கட்ட தகவலின்படி, சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியான குத்ருவில் வரும்போது ஐ.இ.டி., குண்டுவெடிப்பு மூலம் நக்சல்களால் பாதுகாப்பு படையினர் வாகனம் தகர்க்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பலியானவர்கள் எட்டு பேர் தண்டேவாடா டிஆர்ஜி ஜவான்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் உள்பட 9 பேர் என தெரியவந்துள்ளது.

தண்டேவாடா, நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் கூட்டு நடவடிக்கை ரோந்து சென்றுவிட்டு வரும் போது இந்தசம்பவம் நடந்துள்ளது.

பஸ்தார் மண்டல ஐஜி சுந்தர்ராஜ் கூறியதாவது:

குத்ரு பெத்ரே சாலையில் வெடிகுண்டு பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் போலீஸ் வாகனத்தை வெடிக்கச் செய்தனர். இந்த ஆண்டின் முதல் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை சனிக்கிழமையன்று அபுஜ்மத் நகரில் நடத்திவிட்டுத் திரும்பும் போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

ஜனவரி 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்நடவடிக்கை தொடங்கியது. தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளை தேடும்பணி முழுவீச்சில் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us