ADDED : ஜூலை 13, 2011 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஹாசன் தொகுதியை புறக்கணிப்பதாகக் கூறி, முதல்வர் எடியூரப்பா வீட்டு முன் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ., சுமத்திய குற்றச்சாட்டுக்கு சி.பி.ஐ., விசாரணை கேட்டு, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த மகா சுவாமிகள், மங்களூரில் இன்று முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். மங்களூரில் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியுள்ளதை திரும்ப வழங்க வேண்டும், உடுப்பி அனல் மின் நிலையத்தை மூடக் கோரி, இந்த உண்ணாவிரதம் நடக்கிறது.

