sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மருத்துவ மாணவி துாக்கிட்டு தற்கொலை

/

மருத்துவ மாணவி துாக்கிட்டு தற்கொலை

மருத்துவ மாணவி துாக்கிட்டு தற்கொலை

மருத்துவ மாணவி துாக்கிட்டு தற்கொலை


ADDED : டிச 03, 2024 11:34 PM

Google News

ADDED : டிச 03, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; பாலக்காடு அருகே, ஆயுர்வேத மருத்துவ மாணவி விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் வெள்ளையானி ஊக்கோடு பகுதியைச் சேர்ந்த தினேஷின் மகள் நிதா, 20. இவர், பாலக்காடு மாவட்டம் வேலந்தாவளம் அருகே உள்ள அகல்யா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை, 10:30 மணிக்கு, அவர், தங்கியிருந்த கல்லூரி விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை மாணவியர் கண்டனர். தகவல் அறிந்து வந்த கொழிஞ்சாம்பாறை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கல்லுாரி நிர்வாகம் மற்றும் சக மாணவியரிடம் போலீசார் விசாரித்த போது, முதலாம் ஆண்டு தேர்வில், வெற்றி பெற முடியாத மன வருத்தத்தில் இருந்த மாணவி நிதா, மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, தெரியவந்தது. இது குறித்து, கொழிஞ்சாம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us