ADDED : பிப் 08, 2024 06:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: காஷ்மீரில் திடீரென மிகப்பெரிய அளவிலான பனிச்சரிவு சம்பவம் நடந்தது.
ஜம்மு-காஷ்மீரில் வழக்கமான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் பனிகட்டிகள் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஷ்மீரில் உள்ள சோனாமார்க் -ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை அருகே இன்று பெரிய அளவிலான பனிச்சரிவு சம்பவம் நிகழ்ந்தது. இப்பகுதியில் சுரங்கப்பாதைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அதன் அருகேயும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் குறித்த தகவல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு ஏற்படும் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்குமாறு காஷ்மீர் நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

