sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தோனேஷிய அதிபருடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

/

இந்தோனேஷிய அதிபருடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

இந்தோனேஷிய அதிபருடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

இந்தோனேஷிய அதிபருடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

2


ADDED : ஜன 25, 2025 03:54 AM

Google News

ADDED : ஜன 25, 2025 03:54 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நம் நாட்டுக்கு வந்துள்ள இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார்.

நம் நாட்டின், 76வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது.

தலைநகர் டில்லியில் நடக்கும் விழாவில், தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்கிறார்.

இதற்காக மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக, அவர் நம் நாட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார். அவரது முதல் இந்திய பயணம் இது.

இந்நிலையில் டில்லியில் நேற்று, இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

'குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்பது, இந்தியா - இந்தோனேஷியா இடையேயான நட்பின் பொருத்தமான கொண்டாட்டமாக இருக்கும்' என, அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

இரு தரப்பு உறவுகள் குறித்து, பிரதமர் மோடியுடன், பிரபோவோ சுபியாண்டோ இன்று பேச்சு நடத்துகிறார்.

அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், எரிசக்தி, சுற்றுலா உள்ளிட்ட விவகாரங்களில், இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என, கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us