sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாலத்தீவுக்கு ஆதரவாக இருப்போம்: ஜெய்சங்கர்

/

மாலத்தீவுக்கு ஆதரவாக இருப்போம்: ஜெய்சங்கர்

மாலத்தீவுக்கு ஆதரவாக இருப்போம்: ஜெய்சங்கர்

மாலத்தீவுக்கு ஆதரவாக இருப்போம்: ஜெய்சங்கர்

8


ADDED : ஜன 04, 2025 12:40 AM

Google News

ADDED : ஜன 04, 2025 12:40 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற மத்திய அரசு கொள்கையின் உறுதியான வெளிப்பாடாக, மாலத்தீவு திகழ்கிறது. அந்நாட்டுக்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு,'' என, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடான மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா கலீல், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக டில்லி வந்துள்ளார்.

அப்போது, இந்தியா வழங்கும் நிதி உதவி வாயிலாக, மாலத்தீவில் மூன்றாம் கட்ட சமூக மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையெழுத்திட்டது.

இந்தியா- - மாலத்தீவு இடையிலான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கூட்டுப் பார்வையை நனவாக்குவதில், இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உறுதியுடன் இருப்பதாக அப்துல்லா கலீல் தெரிவித்தார்.

அதன் பின் நடந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:


எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு உள்ளூர் கரன்சிகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு இருதரப்பும் கையொப்பமிட்டுள்ளது.

பல்வேறு துறைகளிலும் எங்கள் உறவை வலுப்படுத்தி உள்ளோம். மாலத்தீவுக்கு எப்போதும் இந்தியா உறுதுணையாக இருக்கும்.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற மத்திய அரசு கொள்கையின் உறுதியான வெளிப்பாடாக மாலத்தீவு திகழ்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிபரை நீக்க சதியா?

மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை பதவி நீக்கம் செய்ய, 40 எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக, அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி இந்தியாவிடம் 50 கோடி ரூபாய் பணம் கேட்டதாக அமெரிக்காவின், 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது அடிப்படை ஆதாரமற்றது, உண்மைக்கு புறப்பானது என, நம் வெளியுறவுத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.








      Dinamalar
      Follow us