sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழக அரசியலால் ஹிந்தியை கற்க முடியவில்லை: அமைச்சர் முருகன் வேதனை

/

தமிழக அரசியலால் ஹிந்தியை கற்க முடியவில்லை: அமைச்சர் முருகன் வேதனை

தமிழக அரசியலால் ஹிந்தியை கற்க முடியவில்லை: அமைச்சர் முருகன் வேதனை

தமிழக அரசியலால் ஹிந்தியை கற்க முடியவில்லை: அமைச்சர் முருகன் வேதனை

35


ADDED : டிச 04, 2025 05:04 AM

Google News

35

ADDED : டிச 04, 2025 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாரணாசி: ''ஹிந்தியை கற்பது என் உரிமை. ஆனால், தமிழகத்தில் நிலவும் அரசியலால் என்னால் கற்க முடியவில்லை. டில்லிக்கு வந்த பிறகே ஹிந்தியை கற்றேன்,'' என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது ஆண்டு நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான கலாசார பிணைப்பை பறைசாற்றும் வகையில், மத்திய பா.ஜ., அரசால் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:

தமிழகத்தில் நிலவும் அரசியலால் ஹிந்தியை என்னால் கற்க முடியவில்லை. டில்லிக்கு வந்த பிறகே அதை கற்றுக் கொண்டேன். எனக்கு கொஞ்சம் தான் ஹிந்தி தெரியும்.

ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும். இங்கு அரசியல் பேச நான் விரும்பவில்லை. ஆனால், தமிழகத்தில் ஹிந்தி கற்க ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? ஹிந்தியை கற்பது என் உரிமை. ஆனால் அந்த உரிமை தமிழகத்தில் மறுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையின் கீழ், தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக, விரும்பும் மொழியை மாணவர்கள் கற்கலாம். ஆனால், தமிழகத்தில் ஆளும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, மூன்றாவது மொழியாக ஹிந்தியை திணிக்கும் முயற்சி எனக் கூறி, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.,வும், இரு மொழி கொள்கையே எனக் கூறுகிறது.






      Dinamalar
      Follow us