sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க 2வது நாளாக தடை விதிப்பு!

/

அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க 2வது நாளாக தடை விதிப்பு!

அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க 2வது நாளாக தடை விதிப்பு!

அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க 2வது நாளாக தடை விதிப்பு!

3


UPDATED : மே 24, 2025 07:47 AM

ADDED : மே 23, 2025 12:47 PM

Google News

UPDATED : மே 24, 2025 07:47 AM ADDED : மே 23, 2025 12:47 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போர்ட் பிளேர்: அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது. இதனால் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அந்தமானில் இந்தியா மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது. சமீபத்தில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

தற்போது, முப்படைகளின் உத்தரவின் பேரில், அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது. இதனால் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளை சுற்றிய 500 கிலோமீட்டர் நீள வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மே 16ம் தேதி விமானப்படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2வது நாளாக இன்றும் (மே 24) அந்தமானில் எந்த சிவிலியன் விமானமும் பறக்க அனுமதிக்கப்படாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

காலை 7 மணி முதல் 10 மணி வரை அந்தமான் நிக்கோபார் தீவுகளை சுற்றிய 500 கிலோமீட்டர் நீள வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us