காணாமல் போன வாலிபர் 8 நாளுக்கு பின் சடலமாக மீட்பு
காணாமல் போன வாலிபர் 8 நாளுக்கு பின் சடலமாக மீட்பு
ADDED : பிப் 04, 2026 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பூட்டிய அறையில் இருந்து, ஜன.,25ம் தேதி காணாமல் போன வாலிபர், இறந்த நிலையில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டார்.
வடக்கு டில்லி குலாபி பாக் பகுதியில் வசித்தவர் சந்தீப் குமார்,39. ஜனவரி 25ம் தேதி மாயமானார். இதுகுறித்த புகார்படி, பஹர்கஞ்ச் போலீசார் ஜன., 28ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சந்தீப் குமார் உடல் நேற்று முன் தினம் மாலை மீட்கப்பட்டது.
தலை மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்தன. உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணை நடக்கிறது.

