sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அஜ்மீர் தர்காவில் உருஸ் விழா மலர் போர்வை வழங்கிய மோடி

/

அஜ்மீர் தர்காவில் உருஸ் விழா மலர் போர்வை வழங்கிய மோடி

அஜ்மீர் தர்காவில் உருஸ் விழா மலர் போர்வை வழங்கிய மோடி

அஜ்மீர் தர்காவில் உருஸ் விழா மலர் போர்வை வழங்கிய மோடி


ADDED : ஜன 12, 2024 01:29 AM

Google News

ADDED : ஜன 12, 2024 01:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவில் நடக்கும் உருஸ் விழாவுக்கான மலர் போர்வையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணிக்கையாக வழங்கினார்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் உள்ள புகழ்பெற்ற தர்காவில், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொன்னுதீன் சிஸ்தியின் நினைவிடம் உள்ளது.

உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்களால், காஜா கரிபுன்நவாஸ் என அழைக்கப்படும் அவரது நினைவு தினத்தை கடைப்பிடிக்கும் வகையில் ஆண்டுதோறும் இங்கு உருஸ் எனப்படும் சந்தனக் கூடு விழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு, கடந்த 8ல் துவங்கி வரும், 21 வரை விழா நடக்கிறது.

விமரிசையாக நடக்கும் இந்த விழாவின் போது, அவரின் நினைவிடத்தின் மீது மலர் போர்வைகளை வைத்து வணங்குவதை முஸ்லிம் மற்றும் ஹிந்து மதத்தினர் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு நடக்கவுள்ள விழாவில் பயன்படுத்துவதற்கான, 'சதார்' எனப்படும் மலர் போர்வையை பிரதமர் நரேந்திர மோடி, அஜ்மீர் தர்கா நிர்வாகிகளிடம் நேற்று காணிக்கையாக வழங்கினார்.

அப்போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பா.ஜ., சிறுபான்யினர் பிரிவு தலைவர் ஜமால் சித்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us