sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'கெஜ்ரிவாலிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்'

/

'கெஜ்ரிவாலிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்'

'கெஜ்ரிவாலிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்'

'கெஜ்ரிவாலிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்'


ADDED : ஜன 16, 2025 09:35 PM

Google News

ADDED : ஜன 16, 2025 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்ரம் நகர்:“அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என, ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் வலியுறுத்தி உள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

டில்லி மதுபான கொள்கை வழக்கில் பொய் குற்றச்சாட்டில் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மதுக் கொள்கை ஊழல் என்று அழைக்கப்படுவது, ஒரு பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் என் கைதுகள் சட்டவிரோதமானவை.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவர்கள் ஒரு அனுமதி தேவை என்பதை உணர்ந்துள்ளனர். இந்த வழக்கு பா.ஜ.,வால் ஜோடிக்கப்பட்டது என்பதை இது காட்டுகிறது.

இந்த சட்டவிரோத கைதுகளுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்களிடம் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us