ஆமதாபாத் வந்திறங்கிய யு.ஏ.இ.,அதிபரை விமான நிலையத்தில் வரவேற்றார் மோடி
ஆமதாபாத் வந்திறங்கிய யு.ஏ.இ.,அதிபரை விமான நிலையத்தில் வரவேற்றார் மோடி
UPDATED : ஜன 09, 2024 06:25 PM
ADDED : ஜன 09, 2024 06:16 PM

ஆமதாபாத்: வைபிரன்ட் குஜராத் உலகளாவிய மாநாட்டில் பங்கேற்க குஜராத் வந்த யு.ஏ.இ.,அதிபர் ஷேக் முகம்மது பின் ஜியாத் அல்நெஹயானை விமான நிலையத்தில் வரவேற்றார் பிரதமர் மோடி
வைபிரன்ட் குஜராத் எனும் உலகளாவிய மாநாடு குஜராத்தின் ஆமதாபாத்தில் இரு நாட்கள் நடைபெறுகிறது. இதனை துவக்கி வைக்க பிரதமர் மோடி விமானம் மூலம்ஆமதாபாத் வந்தார்.
அவரை குஜராத் பா.ஜ., முதல்வர் பூபேந்திரபட்டேல், கவர்னர் ஆச்சார்யா தேவரத், பா.ஜ., மாநில தலைவர் சிஆர்.பாட்டீல் ஆகியோர் வரவேற்றனர்.
இந்நிலையில் இன்று (09-ம் தேதி) இம்மாநாட்டில் பங்கேற்க யு.ஏ.இ.,அதிபர் ஷேக் முகம்மது பின் ஜியாத் அல்நெஹயான் வந்தார். அவரை விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர் மோடி. இருவரும் ஆமதாபாத் முக்கிய சாலையில் காரில் பேரணியாக சென்றனர். வழிநெடுகிலும் அவர்களை மக்கள் வரவேற்றனர்.