2029லும் மோடி மீண்டும் பிரதமர்; ‛‛இண்டியா'' கூட்டணி மீண்டும் எதிர்க்கட்சி: அமித்ஷா உறுதி
2029லும் மோடி மீண்டும் பிரதமர்; ‛‛இண்டியா'' கூட்டணி மீண்டும் எதிர்க்கட்சி: அமித்ஷா உறுதி
ADDED : ஆக 04, 2024 04:12 PM

சண்டிகர்: 2029 லும் ‛ இண்டியா ' கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரும் எனக்கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அந்த ஆண்டு மோடி மீண்டும் பிரதமர் ஆக பதவி ஏற்பார் என்றார்.
சண்டிகரில் குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்து அமித்ஷா பேசியதாவது: 2029 லும் எதிர்க்கட்சி வரிசையில் அமர இண்டியா கூட்டணி தயாராக இருக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். 2029 ல் பிரதமர் ஆக மோடி மீண்டும் பிரதமர் ஆக பதவி ஏற்பார். கடந்த 3 தேர்தல்களிலும் காங்கிரசை காட்டிலும் பா.ஜ., கூடுதல் தொகுதிகளை கைப்பற்றி உள்ளது எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை.
எதிர்க்கட்சியினர் நிலையற்ற தன்மையை விரும்புகின்றனர். இதனால் தான் பா.ஜ., அரசு நீடிக்காது என சொல்லி வருகின்றனர். இந்த பதவிக்காலத்தை முழுமையாக பா.ஜ., நிறைவு செய்வதுடன், அடுத்து நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். எப்படி பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என அவர்கள் பாடம் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.