பணமோசடி வழக்கு: நடிகையின் கணவர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
பணமோசடி வழக்கு: நடிகையின் கணவர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
ADDED : நவ 29, 2024 07:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்தரா வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, , 'ஹாட் ஷாட்ஸ்' என்ற, 'மொபைல் போன்' செயலி வாயிலாக ஆபாச படங்களை தயாரித்து வினியோகித்த வழக்கில், 2021ல் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார்.
அவரது ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கியது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (29.11.2024) மும்பை ஜூகு என்ற பகுதியில் உள்ள ராஜ்குந்த்ரா வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தி வருகின்றனர்.

