sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் முன்னதாக வந்த பருவமழை: தணிந்தது வெப்பம்!

/

டில்லியில் முன்னதாக வந்த பருவமழை: தணிந்தது வெப்பம்!

டில்லியில் முன்னதாக வந்த பருவமழை: தணிந்தது வெப்பம்!

டில்லியில் முன்னதாக வந்த பருவமழை: தணிந்தது வெப்பம்!


ADDED : ஜூன் 29, 2025 06:20 PM

Google News

ADDED : ஜூன் 29, 2025 06:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் ஒரு நாள் முன்னதாக வந்த பருவமழையால் நகரில் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை பரவியுள்ள நிலையில், ஜூன்-30 க்கு ஒரு நாள் முன்னதாக டில்லி வந்தடைந்தது.இதனால் டெல்லி-என்.சி.ஆர்., பகுதிகளில் கனமழை பெய்து, சூடான வானிலைக்கு இடையே குளிர்ச்சியான வெப்பநிலை நிலவுகிறது.

இது குறித்து வானிலை ஆய்வு துறையின் மூத்த விஞ்ஞானி நரேஷ் குமார் கூறியதாவது:

தென்மேற்கு பருவமழை தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது, இன்று டில்லியை அடைந்தது. வழக்கமான ஜூன் 30 ஆம் தேதி தொடங்குவது, தற்போது ஒரு நாள் முன்னதாக தொடங்கி உள்ளது. மேலும் நாட்டிலுள்ள மற்ற பகுதிகளுக்கு ஜூலை 8 ஆம் தேதி வழக்கமாக பரவும். அதுவும் 9 நாட்களுக்கு முன்னதாக பரவியுள்ளது.

வங்காள விரிகுடாவின் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட குறைந்த அழுத்த அமைப்பு காரணமாக, நாடு முழுவதும் தற்போது பருவமழை மேகங்களின் செல்வாக்கின் கீழ் உள்ளது. நேற்று குஜராத்தில் இதேபோன்ற அமைப்பு ராஜஸ்தான் மற்றும் என்.சி.ஆர்., பகுதி உட்பட வடமேற்கு மாநிலங்களுக்கு பருவமழையை முன்னேற்ற உதவியது.

இதன் மூலம் வரும் நாட்களில் ஜார்க்கண்ட், ஒடிசா, ஹிமாச்சல் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும்,பஞ்சாப், ஹரியானா, டில்லி மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை மற்றும் மிதமான முதல் கனமழை பெய்யும் வாய்ப்பைக் குறிக்கிறது.

பருவமழை நிலைமைகள் தொடர்ந்து வலுவடைந்து வேகமடைவதால், வாரம் முழுவதும் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு நரேஷ் குமார் கூறினார்.






      Dinamalar
      Follow us