sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஸ்கூட்டர் கவிழ்ந்து தாயும், மகனும் பலி

/

ஸ்கூட்டர் கவிழ்ந்து தாயும், மகனும் பலி

ஸ்கூட்டர் கவிழ்ந்து தாயும், மகனும் பலி

ஸ்கூட்டர் கவிழ்ந்து தாயும், மகனும் பலி

2


ADDED : மே 03, 2025 02:14 AM

Google News

ADDED : மே 03, 2025 02:14 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:பாலக்காடு அருகே, கட்டுப்பாடு இழந்து ஸ்கூட்டர் கவிழ்ந்ததில், தாயும், மகனும் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாட்டுமந்தை என்.கே.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரத்; தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது மனைவி அஞ்சு, 26. இவர்களது இரண்டு வயது ஆண் குழந்தை ஸ்ரீஜன்.

இந்நிலையில், அஞ்சு, மகன் ஸ்ரீஜன் மற்றும் தோழி சூரியலட்சுமியுடன், ஸ்கூட்டரில் ஒற்றைப்பாலம் பகுதியிலுள்ள சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடமான வரிக்காசேரி மனைக்கு 'ரீல்ஸ்' எடுப்பதற்காக, பாலக்காடு- - பட்டாம்பி சாலையில் சென்றனர்.

மதியம், 12:45 மணிக்கு, கல்லேக்காடு கிழக்கஞ்சேரி பகவதி அம்மன் கோவில் அருகே, காட்டுப்பாடு இழந்து ஸ்கூட்டர் சாலையோரம் அடுக்கி வைத்திருந்த குழாய்கள் மீது மோதியது. இதில், தலையில் அடிபட்டு அஞ்சுவும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சூரியலட்சுமியை அப்பகுதி மக்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவல் அறிந்து வந்த பாலக்காடு டவுன் மேற்கு போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us