sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாலிபரை அடித்து கொலை செய்த தாய், சகோதரன், சகோதரி கைது

/

வாலிபரை அடித்து கொலை செய்த தாய், சகோதரன், சகோதரி கைது

வாலிபரை அடித்து கொலை செய்த தாய், சகோதரன், சகோதரி கைது

வாலிபரை அடித்து கொலை செய்த தாய், சகோதரன், சகோதரி கைது


ADDED : நவ 09, 2024 11:13 PM

Google News

ADDED : நவ 09, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே வாலிபரைஅடித்து கொலை செய்து நாடகமாடிய தாய், சகோதரன், சகோதரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பீர்மேடு அருகே பள்ளிகுன்னு தனியார் தேயிலை எஸ்டேட்டைச் சேர்ந்த பாபு- பிரேமா 50, தம்பதி மகன் பிபின் 29. கோவையில் டிரைவராக வேலை செய்தவர், தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். அப்பகுதியில் வசிக்கும் சகோதரி பினிதா 26, மகனுக்கு நவ.,5 நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிபின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

போதையில் இருந்த பிபின், சகோதரியின் ஆண் நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டு தாய் பிரேமாவை தாக்கினார். அதனை கவனித்த சகோதரன் பினோத் 25, பினிதா ஆகியோர் பிபினை பலமாக தாக்கினர்.

மயக்கமுற்ற பிபினை தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் வீட்டின் அருகில் உள்ள கழிப்பறையில் பிபின் தூக்கிட்டுக் கொண்டதாகவும் அவர்கள் டாக்டர்களிடம் கூறினர். பிபினை பரிசோதித்த டாக்டர்கள் இறந்ததாக தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையில் பிபின் கொலையானது தெரியவந்தது. டி.எஸ்.பி., விஷால்ஜான்சன், இன்ஸ்பெக்டர் கோபிசந்த் ஆகியோர் தலைமையில் போலீசார் பிபின் குடும்பத்தினரிடம் விசாரித்த போது அவரை அடித்து கொலை செய்தது தெரிந்தது. பிரேமா, பினோத், பினிதாவை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us