sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காதல் விவகாரத்தில்  தாய், மகன் கொலை

/

காதல் விவகாரத்தில்  தாய், மகன் கொலை

காதல் விவகாரத்தில்  தாய், மகன் கொலை

காதல் விவகாரத்தில்  தாய், மகன் கொலை


ADDED : டிச 06, 2024 06:36 AM

Google News

ADDED : டிச 06, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: காதல் விவகாரத்தில் தாய், மகன் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெலகாவி நிப்பானி அகோலா கிராமத்தில் வசித்தவர் மங்களா நாயக், 45. இவரது மகன் பிரஜ்வல், 18. நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் மங்களா வீட்டிலிருந்து வெளியே வரவில்லை.

சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மங்களாவும், பிரஜ்வலும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். மஞ்களாவின் மகளான 15 வயது சிறுமி வீட்டில் இல்லை.

பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரித்த போது ரவி, 30, என்பவரும், மங்களாவின் மகளும் காதலித்ததும், இந்த காதலுக்கு மங்களா எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்தது. இதனால் ரவி வீட்டிற்கு போலீசார் சென்றனர். வீட்டின் ஒரு அறையில் இருந்த மங்களாவின் மகளை மீட்டனர்.

ரவியிடம் விசாரித்த போது, 'காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மங்களாவை அரிவாளால் வெட்டினேன். தடுக்க முயன்றதால் பிரஜ்வலுக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் இறந்து விட்டனர். என் காதலியை அங்கிருந்து அழைத்து வந்தேன்' என, போலீசாரிடம் கூறினார். இதனால், அவரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் மங்களாவின் மகளுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us