ADDED : பிப் 29, 2024 11:16 PM
எப்.ஏ.ஆர்., முறைக்கு எண்
l எப்.ஏ.ஆர்., எனும் தரை பரப்பளவு விகித அடிப்படையில், சொத்து அடையாள எண் வழங்கப்படும். அதுவும் பாரபட்சமின்றி தொழில்நுட்ப முறையில் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம், 2024 - 25ம் ஆண்டில், எப்.ஏ.ஆர்., கட்டணம் 1,000 கோடி ரூபாய் உட்பட நகர திட்டம் மூலம் 1,709 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துப்புரவு தொழிலாளர்கள்
16,000 பேர் நியமனம்
l பொது மக்களும் மாநகராட்சி நிர்வகிப்பில் பங்கெடுக்கும் வகையில், 225 வார்டுகளுக்கும் வார்டு கமிட்டிகள், மண்டல கமிட்டிகள் அமைத்து, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும்
l ஒவ்வொரு வார்டிலும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட வார்டு கமிட்டிக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது
l காலியாக உள்ள பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கு அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க, அரசின் செயலர் அளவில் கமிட்டி அமைப்பதற்கு அரசிடம் கோரப்படும்
l புதிதாக 16,000 துப்புரவு தொழிலாளர்கள், நேரடியாக நியமனம் செய்து கொள்ளப்படும்
l மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகாரிகள் நியமிக்கப்படுவர். நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்வதற்காக ஆர்.வி.தேஷ்பாண்டே தலைமையிலான நிர்வாக சீர்திருத்த கமிட்டி அறிக்கை வந்த பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
l மாநகராட்சி சேவைகளை சுலபமாக பெரும் வகையில், பிராண்ட் பெங்களூரு இணையதளம், ஏரிகள் கண்காணிப்பு முறை, பூங்காக்கள் கண்காணிப்பு முறை, மாநகராட்சி சொத்துக்கள், கியூ.ஆர்., குறியீடு கணக்கெடுப்பு முறை, இந்திரா உணவகங்கள் கண்காணிப்பு முறை, மாநகராட்சி நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு முறை, பசுமை பாதுகாவலர், குப்பை நிர்வகிப்பு, ஓய்வூதியம் கண்காணிப்பு முறை ஆகியவைகளுக்கு தொழில்நுட்பம் உருவாக்கப்படும்
l ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஊழியர்களின் குடும்பத்தினரின் எதிர்காலம் கருதி, மாநகராட்சி ஓய்வூதியதாரர்கள் சுகாதார நல நிதி பெயரில், கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும்
l புத்தகம் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில், மாநகராட்சி தலைமை அலுவலக வளாகத்தில் நுாலகம் அமைக்கப்படும். இந்திரா உணவகம் அமைக்கப்படும். புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அதிகாரிகளுக்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் 'நாடபிரபு கெம்பேகவுடா' பரிசு வழங்கப்படும்.
மாநகராட்சி நிர்வாகம்

