sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு ரத்து: முருகனுக்கு திடீர் நிம்மதி

/

முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு ரத்து: முருகனுக்கு திடீர் நிம்மதி

முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு ரத்து: முருகனுக்கு திடீர் நிம்மதி

முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு ரத்து: முருகனுக்கு திடீர் நிம்மதி

26


ADDED : டிச 06, 2024 04:13 AM

Google News

ADDED : டிச 06, 2024 04:13 AM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : மத்திய அமைச்சர் முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தாக்கல் செய்திருந்த அவதுாறு வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முருகன், கடந்த 2020ல் அளித்த பேட்டியில், 'முரசொலி அறக்கட்டளையின் சென்னை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது' என்று கூறியிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக, முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ-.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்த மனு, கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முருகன் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் யாரையும் அவதுாறு செய்யும் எண்ணம் இல்லை என முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முருகன் தரப்பு வாதத்தை ஏற்றும், அதன் அடிப்படையில், அவதுாறு வழக்கைத் தொடரப்போவதில்லை என்று முரசொலி அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டதையும் அமர்வு குறிப்பிட்டது.

இதையடுத்து, அவதுாறு வழக்கை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாக அமர்வு குறிப்பிட்டது. மேலும், சென்னை நீதிமன்றத்தில் உள்ள முருகனுக்கு எதிரான அவதுாறு வழக்கை ரத்து செய்தும், உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us