sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இரண்டு முதல் பரிசுகள் வென்ற மைசூரு மாணவர்

/

இரண்டு முதல் பரிசுகள் வென்ற மைசூரு மாணவர்

இரண்டு முதல் பரிசுகள் வென்ற மைசூரு மாணவர்

இரண்டு முதல் பரிசுகள் வென்ற மைசூரு மாணவர்


ADDED : நவ 22, 2024 07:22 AM

Google News

ADDED : நவ 22, 2024 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் நடந்த மினி ஒலிம்பிக்ஸ் போட்டியில், எட்டாம் வகுப்பு மாணவர் அஜய் பிருத்விராஜ், இரண்டு பரிசுகளை வென்றுள்ளார்.

கர்நாடக விளையாட்டு துறை மற்றும் மாநில ஒலிம்பிக்ஸ் அசோசியேஷன் ஒருங்கிணைப்பில், மினி ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்தன. ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மைசூரு நகரின் காயத்ரிபுரத்தில் வசிக்கும் லிங்கராஜு, சங்கீதா தம்பதியின் மகன் அஜய் பிருத்விராஜ், 14.

இவர் ஐடியல் ஜாவா ரோட்டரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். இவர் மினி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார்.

சிறுவர்களுக்கான 400 மீட்டர் மற்றும் 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று, இரண்டிலும் முதல் பரிசை தட்டி சென்றார்.

ஓட்ட பந்தயத்தில் சாதனை செய்யும் அஜய் பிருத்விராஜ், சர்வதேச அதெலடிக் ரீனா ஜார்ஜிடம் பயிற்சி பெறுகிறார்.






      Dinamalar
      Follow us