பஞ்சாபில் முன்னாள் டிஜிபி மகன் மரணத்தில் மர்மம்: குடும்பத்தினர் மீது வழக்கு
பஞ்சாபில் முன்னாள் டிஜிபி மகன் மரணத்தில் மர்மம்: குடும்பத்தினர் மீது வழக்கு
ADDED : அக் 21, 2025 07:54 PM

சண்டிகர்:பஞ்சாபில் முன்னாள் டிஜிபி மகன் மரணத்தில் மர்மம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பஞ்சாபில் முன்னாள் டிஜிபி முகமது முஸ்தபா, முன்னாள் பஞ்சாப் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ரசியா சுல்தானா தம்பதியின் மகன் அகில் அக்தர் 35, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதியன்று தனது வீட்டில் சுயநினைவின்றி கிடந்தார். அதை தொடர்ந்து அகில் அக்தரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். அதை தொடர்ந்து அகில் அக்தரின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.
இந்த நிலையில் அகில் அக்தர் மரணத்தில் மரணம் தொடர்பாக, ஷம்ஷூதீன் சவுத்ரி என்பவர் சந்தேகம் எழுப்பி அதற்கு ஆதாரம் இருப்பதாக,தனது சமூக ஊடக கணக்கில் வெளியான வீடியோக்களை குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோக்களில் அகில் அக்தர் கூறியுள்ள வார்த்தைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அதாவது, தனது மனைவிக்கும், தன் தந்தைக்கும் தவறான உறவு இருப்பதாக தனக்கு தெரியவந்ததை அடுத்து நான் அதிகப்படியான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக கூறியிருந்தார். எனது தந்தை போலீஸ் உயர் அதிகாரியாக இருந்தவர் என்பதால் என் மீது பொய் வழக்கு போடலாம் என்பதால் எனக்கு என் மீது உயிர் பயம் ஏற்பட்டுள்ளது. மேலும் எனது தாயும், சகோதரியும் தந்தையின் செயலுக்கு உடந்தையாக இருப்பதால் நான் கொல்லப்படலாம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஷம்ஷூதீன் சவுத்ரி அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் பஞ்சாப் டிஜிபி முகமது முஸ்தபா, அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது 103(1) மற்றும் 61 பாரதிய ஜெய் சன்ஹிதா பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து டி.சி.பி சிருஷ்டி குப்தா கூறுகையில்,அகீல் தனது வீட்டில் மயக்கமடைந்ததை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனர், பின்னர் அவர் போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மரணம் ஏற்பட்டதாகக் கூறினர். இருப்பினும், ஷம்சுதீன் சவுத்ரி அளித்த புகாரும், ஆகஸ்ட் 27 அன்று அகீல் பதிவு செய்த 16 நிமிட வீடியோவும், அவர் மீது கடுமையான சந்தேகங்களை எழுப்பின.
இதுகுறி்த்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.