
உரிமை மீறலில் ஏ.ஐ.,
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ல் மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுவரை மனித உரிமைகளை மீறுபவர் மனிதராக இருந்தார். அவருக்கு குற்ற உணர்வு, இரக்கம் இருக்கும். ஆனால் இன்றைய டிஜிட்டல் காலத்தில் குற்றவாளி ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவாக கூட இருக்கலாம்.
திரவுபதி முர்மு
ஜனாதிபதி
பா.ஜ.,வுக்கு பயம்!
அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என நாங்கள் கோரினால், பா.ஜ.,வினர் சோனியா - சோரஸ் விவகாரத்தை பேசுகின்றனர். ஆதாரம் ஏதுமில்லாத 1994 விஷயத்தை தற்போது கொண்டு வருவதன் காரணம், அதானி விவகாரத்தை பற்றி பா.ஜ.,வினர் விவாதிக்க அஞ்சுகின்றனர்.
பிரியங்கா
லோக்சபா எம்.பி., -- காங்கிரஸ்
ராகுலுக்கு தெரியவில்லை!
எதிர்க்கட்சிகள் பார்லிமென்டை செயல்பட விடாமல் தடுப்பது வருத்தமளிக்கிறது. பிரதமர் மோடி, அதானி தோற்றத்தில் முகமூடி அணிந்து வருவது, அவர்களை ராகுல் வீடியோ பதிவு செய்வது எல்லாம் கேலிக்கூத்தான செயல். ராகுலுக்கு எதிர்க்கட்சி தலைவராக செயல்பட தெரியவில்லை.
சம்பித் பத்ரா
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

