
காலம் முடிந்துவிட்டது!
பீஹார் முதல்வர் நிதீஷ் குமாருடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரது காலம் முடிந்துவிட்டது. சோர்வடைந்து போயுள்ள அவரால் இனிமேல் பீஹாரை நிர்வாகம் செய்ய முடியாது. மத்திய பா.ஜ., நிதீஷ் குமாரை சார்ந்துள்ள போதும், பீஹாருக்கு அவரால் சிறப்பு அந்தஸ்து பெற முடியவில்லை.
தேஜஸ்வி யாதவ்
தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
திட்டங்கள் தொடரும்!
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மஹாராஷ்டிரா கூட்டணி அரசு, மகளிருக்கான உதவித்தொகை திட்டத்தை கடைசி நேரத்தில் அறிவித்தது ஏன்? நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அந்த திட்டம் தொடரும். இந்த ஆட்சியில் பல தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டன.
ஆதித்யா தாக்கரே
முன்னாள் அமைச்சர், சிவசேனா உத்தவ் அணி
தெளிவாக தெரிகிறது!
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான 'முடா' தலைவர் பதவியில் இருந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான மரிகவுடா பதவி விலகியுள்ளார். இந்த சம்பவத்தில் இருந்து, முடா ஊழலில் சித்தராமையா சிக்கியிருப்பது தெளிவாக தெரிகிறது. அவர் பதவி விலக வேண்டும்.
சம்பித் பத்ரா
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

