
காங்கிரஸ் என்றால் அராஜகம்!
காங்கிரஸ் கட்சி பார்லிமென்டை நடத்த ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவர்களுக்கு ஜனநாயகம் மற்றும் பார்லிமென்ட் அமைப்பின் மீது நம்பிக்கை கிடையாது; அராஜகத்தை கொண்டு வர நினைக்கின்றனர். ராஜ்யசபா தலைவர் குறித்து சபைக்கு வெளியே கருத்து தெரிவிப்பது கண்டனத்திற்குரியது.
நட்டா
மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஜனநாயகத்துக்கு துயர்!
ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய, 60 ராஜ்யசபா உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்து உள்ளனர். இது, முன்னெப்போதும் நடக்காத ஒன்று. ஜனநாயகத்துக்கு துயர தினம் இது. சபையின் செயல்பாட்டில் சம வாய்ப்பை வழங்காதவர்களை வரலாறு மன்னிக்காது.
கபில் சிபல்
ராஜ்யசபா எம்.பி., - சுயேச்சை
காலத்தின் கட்டாயம்!
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது, அரசுக்கு அதிக செலவை ஏற்படுத்துகிறது. அதைவிட, மக்களை ஒவ்வொரு முறை ஓட்டு போட வர வைப்பதும் சவாலான பணியாக உள்ளது. எனவே, ஒரே நாடு; ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம். அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.
கங்கனா ரணாவத்
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

