
காயத்துக்கு கிடைத்த மருந்து!
அயோத்தியில், ராமர் கோவிலில் பால ராமரின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டதன் வாயிலாக, 500 ஆண்டுகள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. முகலாய ஆட்சியாளர் பாபர் காலத்தில், நம் இதயங்களில் ஏற்பட்ட ஆழமான காயத்துக்கு தற்போது மருந்து கிடைத்துள்ளது.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
எதிர்க்கட்சியினருக்கு குறி!
மத்திய விசாரணை அமைப்புகள் தொடர்ந்துள்ள வழக்குகளில், 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரானவை. இந்த அமைப்புகளை, ஆளும் மத்திய பா.ஜ., அரசு தவறாக பயன்படுத்துவது இதன் வாயிலாக தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
சுப்ரியா சுலே
லோக்சபா எம்.பி., தேசியவாத காங்.,
சாவர்க்கருக்கு விருது எங்கே?
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை, 11 பேருக்கு 'பாரத் ரத்னா' விருது வழங்கியுள்ளது. ஆனால், ஹிந்துத்துவா சித்தாந்தவாதி வீர் சாவர்க்கருக்கு, இன்னும் பாரத் ரத்னா வழங்கப்படாதது ஏன்?
சஞ்சய் ராவத்
ராஜ்யசபா எம்.பி., உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா