
மிகப்பெரிய வெற்றி!
சமத்துவம், நீதி, நேர்மை என, ஜனநாயகத்தின் அனைத்து கொள்கை களையும் தேர்தல் பத்திரத் திட்டம் மீறியுள்ளது. இதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, வெளிப்படைத் தன்மை, தகவலறியும் உரிமைச் சட்டத்துக்கு கிடைத்த வெற்றி.
சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர்,
காங்கிரஸ்
ஏற்றுக்கொள்ள முடியாது!
டில்லிக்கு சென்று விவசாயிகள் போராட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் போராடும் விதத்தில் தான் பிரச்னை உள்ளது. டிராக்டர், லாரிகளில் சென்று போராடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மனோகர் லால் கட்டார்
ஹரியானா முதல்வர், பா.ஜ.,
தனித்து போட்டி!
வரும் லோக்சபா தேர்தலில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
பரூக் அப்துல்லா
தலைவர்,
தேசிய மாநாட்டு கட்சி