அனைவருக்குமான அரசு!
ஓட்டு வங்கி அரசியலால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்., எதிர்ப்பு தெரிவிக்கிறது. நாங்கள், இந்த சட்டத்தை கொண்டு வருவோம் என, உறுதி அளித்தோம். அதை தற்போது நிறைவேற்றி உள்ளோம். அனைவருக்குமான அரசாக, பிரதமர் மோடி அரசு திகழ்கிறது.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல!
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி. இந்த சட்டம், சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல. இதில், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன.
ரவிசங்கர் பிரசாத்
மூத்த தலைவர்,
பா.ஜ.,
ஆட்சியை கவிழ்க்க சதி!
லோக்சபா தேர்தலுக்கு பின், தெலுங்கானாவில் காங்., அரசு இருக்காது என, பா.ஜ., தொடர்ந்து கூறி வருகிறது. என் தலைமையிலான அரசை கவிழ்க்க, பாரத் ராஷ்ட்ர சமிதி - பா.ஜ., ஆகியவை சதி செய்து வருகின்றன.
ரேவந்த் ரெட்டி
தெலுங்கானா
முதல்வர், காங்.,

