ADDED : பிப் 04, 2026 04:20 AM

வாய்ப்பு வழங்கவில்லை! எஸ்.ஐ.ஆர்., நடைமுறையால் பாதிக்கப்பட்டோரு க்கு, தங்களை தற்காத்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் ஓயாது. சட்டசபை தேர்தலுக்கு முன் ஏன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது? எந்தவித திட்டமிடலும் இன்றி மூன்று மாதங் களுக்குள் இது சாத்தி யமா? மம்தா பானர்ஜி மே. வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
சர்வதேச சுகாதார மையம்! இந்திய மருந்துப் பொருட்கள் உலகம் முழுதும், 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்ப டுகின்றன. உலகின் பொது மருந்து களில் 30 சதவீதத்தையும், உலகளவில் தடுப்பூசி தேவையில் 60 சதவீதத்தையும் நாம் வழங்கி வருகிறோம். இதன்மூலம், நம் நாடு, உலகளாவிய சுகாதார மையமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. நட்டா மத்திய அமைச்சர், பா.ஜ.,
அதானியை காக்கும் நடவடிக்கை! அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பை குறைக்க, தேசிய நலனையும், விவசாயிகளின் நலனையும் மத்திய அரசு சமரசம் செய்துள்ளது. தொழிலதிபர் கவுதம் அதானியை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி., உத்தவ் சிவசேனா பிரிவு
