
மறக்கப்பட வேண்டிய பட்ஜெட்! கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதிகளை மறந்த ஒரு நிதியமைச்சரால் தயாரிக்கப்பட்ட, மறக்கப்பட வேண்டிய பட்ஜெட் இது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாத சூழலில், மூலதனச் செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன. விவசாயம், கிராமப்புற வளர்ச்சிக்கான நிதியில், 60,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,
முழுமையாக வேரறுக்கப்படும்! நக்சலிசம் ஒருபோதும் சமூகத்திற்கு பயனளித்தது இல்லை. அவை இருந்த இடங்கள் அனைத்தும் அழிவையே சந்தித்துள்ளன. வரும் மார்ச் 31க்குள் நக்சல் அச்சுறுத்தல் நாட்டி லிருந்து முழுமையாக வேரறுக்கப்படும். நக்சல்கள் சரணடைந்தால், அவர்களுக்கு கண்ணியமான மறுவாழ்வு அளிக்கப்படும். அமித் ஷா மத்திய அமைச்சர், பா.ஜ.,
முற்றிலும் விசித்திரமானது! லோ க்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுலை பேச அனுமதிக்காதது முற்றிலும் விசித்திரமானது. தன் கருத்தை அவர் தெரிவிக்க முயற்சித்தபோது, மைக் இணைப்பை துண்டித்துவிட்டனர். ஒரு தரப்புக்கு மட்டும் பேச அனுமதி வழங்குவது சரியல்ல; இந்த சபை, அனைவருக்கும் சொந்தமானது. சசி தரூர் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

