
கண்ணியம் தேவை! நம் நாட்டிற்கு எதிராக குந்தகம் விளைவிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நம் ஜனநாயக உரிமை. ஆனால், சர்வதேச நிகழ்வுகளின் போது கண்ணியம், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள், உலகளவில் நம் நாட்டின் பிம்பத்தை நிலைநிறுத்தும். மார்கரெட் ஆல்வா முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,
சரியான அரசு இல்லை! கேரளாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் திறன் கொண்ட சரியான அரசு, இம்மாநிலத்தில் இதுவரை அமையவில்லை. மத்திய அரசின் திட்டங்களையும் முறையாக செயல்படுத்தவில்லை. காங்., மற்றும் இடதுசாரி கூட்டணி அரசுகளால் கேரள மக்கள் சோர்வடைந்துள்ளனர். இதற்கு மாற்றாக, தே.ஜ., கூட்டணி அரசு ஆட்சி அமைக்கும். கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சர், பா.ஜ.,
நீதிமன்றத்தை நாடுவோம்! கேரளாவில் ஆளும் இடதுசாரி, தேர்தல் பிர சாரத்திற்காக அரசு இயந்திரங்களையும், பொது நிதியையும் தவறாக பயன்படுத்துகிறது. தனிநபரின் தரவுகளை, அவர்களின் அ னுமதியின்றி முதல்வரி ன் சமூக ஊடகப்பிரிவு எவ்வாறு பெற்றது? ஆளும் அரசின் இதுபோன்ற விதிமீறல்களை எதிர்த்து நாங்கள் நீதி மன்றத்தை நாட உள்ளோம். வி.டி.சதீஷன் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், காங்.,

