ADDED : மார் 13, 2026 02:14 AM

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை நம் பிரதமர் மோடி அவமதிக்க வேண்டும் என, காங்., தலைவர் ராகுல் விரும்புகிறார். இதன் மூலம் அந்த நாடுகள் நம் நாட்டை தாக்கினால், அவரது ஆன்மா சாந்தியடையும். நாட்டை உடைக்கும் சதியில், ஜார்ஜ் சோரோசுடன் இணைந்து அவர் ஈடுபட்டுள்ளார்.
நிஷிகாந்த் துபே லோக்சபா எம்.பி., -- பா.ஜ.,
நெருக்கடியை கட்டுப்படுத்துவோம்!
பெட்ரோலிய பொருட்களுக்கான நெருக்கடியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கூடுதல் வினியோகத்தை பெறுவதற்கான வழிகளும் திறக்கப்பட்டுள்ளன. அவசர பயன்பாட்டு சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கொரோனா போன்ற நெருக்கடி காலங்களில் இருந்த சுயகட்டுப்பாட்டை மக்கள் பின்பற்ற வேண்டும்.
சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,
மோசமான செயல்திறன்!
முதல்வர் நிதிஷ் தலைமையிலான அரசின் கீழ், மாநிலத்தின் அனைத்து துறை வளர்ச்சி குறியீடுகளும் மோசமான செயல்திறனை கொண்டுள்ளன. நாட்டிலேயே கல்வியறிவு விகிதம், தனிநபர் வருமானம், விவசாயிகளின் வருவாய் ஆகியவை பீஹாரில் குறைந்துள்ளன. ஊழல், கல்வி இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது.
தேஜஸ்வி யாதவ் செயல் தலைவர், ராஷ்ட்ரிய ஜனதா தளம்

