ADDED : ஏப் 18, 2026 01:37 AM

புதிய சகாப்தம்! பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா, சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தலை உறுதிசெய்வதில் புதிய சகாப்தத்தை உருவாக்கும். இந்த மசோதா பெண்களின் போராட்டங்கள், துணிச்சல் மற்றும் வலிமைக்குச் செலுத்தப்படும் ஒரு மரியாதையாகும். ஜாதி அல்லது மதம் சார்ந்த எந்த பாகுபாட்டையும் இது காட்டவில்லை. ஹேம மாலினி லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
அக்கறையற்ற அணுகுமுறை! சட்டம் இயற்றும் நடைமுறையை பொருட்படுத்தாமல், பார்லி.,யை ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போல் ஆளும் பா.ஜ., அரசு பயன்படுத்துகிறது. அரசிதழில் வெளியிடாத ஒரு சட்டப் பிரிவில் மத்திய அரசு திருத்தங்களை கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. முக்கிய சட்டங்களை இயற்றுவதில் அக்கறையற்ற அணுகுமுறையை இது காட்டுகிறது. கே.சி.வேணுகோபால் பொதுச்செயலர், காங்கிரஸ்
அரசியலமைப்புக்கு உட்பட்டது! குடியுரிமை திருத்த மசோதா, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என அனைத்திற்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவிக்கிறார். இவை அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டவை. நீங்கள் இந்த நாட்டில் வாழ விரும்பினால், அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். சுவேந்து அதிகாரி மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,
